ட்விட்டர் அக்கவுண்ட் இருந்தா பணம் சம்பாதிக்கலாம்.. எலான் மஸ்க் அசத்தல் அறிவிப்பு!

 
எலான் மஸ்க்

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அடுத்தடுத்து பல்வேறு துறைகளில் கால்பதித்து அதில் சாதித்தும் வருகிறார். அந்த வரிகையில், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு புதிய அதிரடி நடவடிக்கைகள், அப்டேட்களை மேற்கொண்டு வருகிறார். 


தொடக்கத்தில் இவரது நடவடிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனினும் தொடர்ந்து, பணியாளர்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அவர் தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்பொழுது, ட்விட்டரில் பதிவிடும் பதிவுகள் மற்றும் விடீயோக்கள் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்று எலான் மஸ்க் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, அதிக உரையுடன் நீண்ட வீடியோக்கள், போஸ்டுகளை பதிவிடலாம் மற்றும் அவற்றை உங்களை பின்தொடருபவர்கள் பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். இதனை பெறுவதற்கு செட்டிங்ஸில் உள்ள மானிடைஸ் (monetize) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் என்று எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

எலான் மஸ்க்

மேலும், அடுத்த 12 மாதங்களுக்கு, ட்விட்டர் பணம் எதையும் வைத்திருக்காது. உங்கள் பதிவுகள் மூலம் நாங்கள் பெறும் பணத்தை இனிமேல் நீங்கள் பெறுவீர்கள். இதன் மூலம் iOS மற்றும் Android இல் 70 சதவீதமும் இணையத்தில் 92 சதவீதமும் பணம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. படைப்பாளர்களின் பண வாய்ப்பை அதிகரிப்பதே எங்கள் குறிக்கோள் என்றும் பதிவிட்டுள்ளார்.

From around the web