ரஷிய ஒலிம்பிக் கமிட்டி மீதான தடையை நீக்கியது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி!

 
olympics

கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது படையெடுத்த ரஷியா, அங்குள்ள சில முக்கியப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அத்துடன் தங்களின் ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைன் பிராந்தியங்களில் செயல்பட்டு வந்த ஒலிம்பிக் கவுன்சில்களையும் ரஷிய ஒலிம்பிக் கமிட்டியுடன் முறைக்கேடாக இணைத்தது. இந்த விதிமீறல் காரணமாகக் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஷிய ஒலிம்பிக் கமிட்டிக்குச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) கடுமையான தடை விதித்து உத்தரவிட்டது.

IOC provisionally lifts suspension of Russian Olympic Committee | Sport Resolutions

இந்தத் தடையின் காரணமாகச் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் ரஷிய நாட்டு வீரர்கள் நேரடியாகத் தங்களின் நாட்டின் பெயரில் பங்கேற்பதில் மிகப்பெரிய சிக்கல் நீடித்து வந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கூட ரஷிய வீரர்கள் தங்களின் சொந்த நாடு சார்பில் கலந்து கொள்ள முடியாமல் போனது. அவர்கள் பொதுவான நடுநிலை வீரர்கள் என்ற பெயரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கொடியின் கீழ் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் உலக விளையாட்டு வீரர்களுக்குச் சமமான வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ரஷிய ஒலிம்பிக் கமிட்டி மீதான தடை தற்பொழுது முழுமையாக நீக்கப்பட்டு இருப்பதாகச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முக்கிய நடவடிக்கை மூலம் வரும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ர‌ஷிய வீரர்கள் மீண்டும் தாராளமாகக் கலந்துகொள்ள வழிவகை பிறந்துள்ளது. இந்தத் தடை நீக்க முடிவை ரஷிய விளையாட்டு அமைச்சகம் மனதார வரவேற்றுள்ள நிலையில், உக்ரைன் அரசு தங்களின் பலத்த அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது.