கோரவிபத்து!! தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து!! 2 பேர் பலி!! 20 பேர் படுகாயம்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதுச்சேரியில் இருந்து திருப்பூருக்கு வந்துகொண்டிருந்த ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த கோரவிபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சின்ன சேலத்தில் காளசமுத்திரம் என்ற இடத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து, தாறுமாறாக ஓடி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. கவிழ்ந்த வேகத்தில் சிலர் தூக்கியெறியப்பட்டனர். பேருந்துக்குள்ளேயே பல பயணிகள் சிக்கிக் கொண்டனர். பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று பேருந்தில் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். சாலையில் கவிழ்ந்து கிடந்த பேருந்தை கிரேன் உதவியுடன் நிமிர்த்தி சாலையோரம் கொண்டு வந்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரமாக தடைபட்டிருந்த போக்குவரத்தை சரி செய்தனர்.
இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?