ஆம்னி பேருந்து ஓட்டுநரை கட்டி வைத்து தாக்கிய உரிமையாளர்.. அதிர்ச்சி வீடியோ வைரல்!
சென்னை - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்தில் ஓட்டுநர் சித்ரவதை செய்யப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆம்னி பேருந்து நிறுவனத்துக்குத் தெரியாமல் பயணிகளை ஏற்றிச் சென்று பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விஷயம் ஆம்னி பஸ் உரிமையாளருக்கு தெரிய வந்ததையடுத்து, மதுரை ஆம்னி பஸ் அலுவலகத்தில் டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னிபேருந்து நிலையத்தில் உள்ள தனியார் பேருந்து நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர் ஒருவரை, அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பேருந்து நிறுவன அலுவலர்கள் ஓட்டுநரின் கையை கயிற்றால் ஜன்னலில் கட்டி வைத்து விசாரணை நடத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது pic.twitter.com/IbNzu2lmEA
— Backiya (@backiya28) July 24, 2024
டிரைவரின் கைகளை ஜன்னல் கம்பிகளால் பின்னால் கட்டி நீண்ட நேரம் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கைகளில் வலி ஏற்பட்டதால், கதறி அழுத டிரைவரை, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கைகளை அவிழ்க்க விடவில்லை. இந்த தாக்குதலின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து மனித உரிமை ஆணையமும், தமிழக காவல்துறையும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
