ஓணம், மீலாது நபி விடுமுறை... நாளை மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை!

 
சட்டசபை சட்டப்பேரவை விஜய் முதல்வர் பட்ஜெட்

ஓணம் மற்றும் மீலாது நபி பண்டிகைகளை முன்னிட்டு இன்று தமிழக சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை ஆகஸ்ட் 27-ம் தேதி அவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது.

சட்டப்பேரவை விஜய் தீர்மானம்

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்) மற்றும் குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலளித்துத் தங்களது துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். காரசாரமான விவாதங்களுக்கு இடையே தொழில்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைகளின் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

மீலாது நபி மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சட்டசபையின் அன்றைய நிகழ்வுகள் இரவு 7.13 மணிக்கு நிறைவடைந்த நிலையில், மீண்டும் நாளை ஆகஸ்ட் 27, வியாழக்கிழமை காலை அவை கூடும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.