உடலுக்குள் மறைத்து ஒரு கிலோ தங்கக் கடத்தல்!!
மலேசியாவில் இருந்து இரு பயணிகள் கடத்தி வந்த ஒரு கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் சந்தேகத்துக்குயிடமான இரு பயணிகளை தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவரும் உடலுக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மூலம் தங்கம் வெளியே எடுக்கப்பட்டது. இருவரும் 1188 கிராம் தங்கத்தை பசை வடிவில் மாற்றி கடத்தி வந்திருந்தனர். அவற்றின் மதிப்பு 71.72 லட்சம் ஆகும். இது தொடர்பாக சுங்கத்துறையினர் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?