இனி வரிசையில் நிக்க தேவையில்ல... ஆன்லைனில் முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகள்!

 
ரயில் முன்பதிவு
 

2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பிற்கு பிறகு இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அதிகமாகிவிட்டது.  சிறிய கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை டிஜிட்டல் மூலமாக எளிதில் ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் வசதியை வைத்திருக்கிறார்கள்.

ரயில்

டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வது இன்று பெரும்பாலான இடங்களில் அறிமுகமாகி விட்டாலும், ஒரு சில இடங்களில் இதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக பஸ்களில் டிக்கெட் எடுப்பது, ரயிலுக்காக டிக்கெட் எடுப்பது உள்ளிட்ட இடங்களில் இன்றளவும் நேரடியாக பணமே பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய ஒருசில இடங்களில் வாய்ப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுக்கும் போது தாராளமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நேரடியாக டிக்கெட் கவுண்டரில் சென்று டிக்கெட் எடுக்கும் போது அங்கு பணத்தை மட்டுமே கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அங்கு டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.

ரயில் டிக்கெட்

இந்நிலையில் நாடு முழுவதும் இன்று முதல் பயணிகள் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டை டிஜிட்டல் பரிமாற்றம் செய்து எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இனி வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டத்திற்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web