உஷார்!! டிசம்பர் 14 வரை இந்த ரயில் ரத்து!! பயணத்தை சரியா திட்டமிட்டுக்கோங்க!!

 
உஷார்!! டிசம்பர் 14 வரை இந்த ரயில் ரத்து!! பயணத்தை சரியா திட்டமிட்டுக்கோங்க!!

கனமழை காரணமாக டிசம்பர் 14-ஆம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உஷார்!! டிசம்பர் 14 வரை இந்த ரயில் ரத்து!! பயணத்தை சரியா திட்டமிட்டுக்கோங்க!!

வடகிழக்கு பருவமழை காரணமாக உதகை – மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் பாதைகளில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் 22 ஆம் தேதி கல்லாறு – ஆர்டர்லி ரயில் நிலையங்களுக்கு இடையேயுள்ள ரயில் பாதையில், தண்டவாளத்தின் மேல் பாறைகள் விழுந்தன. இதனையடுத்து மேலும் சில இடங்களில் மண் சரிவுகள் ஏற்படவே, ரயில்வே நிர்வாகம் டிசம்பர் 7 ஆம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்தை ரத்து செய்திருந்தது. இந்நிலையில், கனமழை நீடிப்பதன் காரணமாகவும், ஆங்காங்கே மீண்டும் மண் சரிவுகள் ஏற்படுவதாலும் டிசம்பர் 14 ஆம் தேதி மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

From around the web