வெங்கையா நாயுடு, உஷா உதூப், விஜயகாந்த் உட்பட 117 பேருக்கு பத்ம விருதுகள்!

 
உஷா உதூப்

 
2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டன. அந்த வகையில் பத்ம விருதுகள் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில்  நேற்று நடைபெற்றது. இந்த பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.  இந்த விழாவில் 5 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 17 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும் , 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் வழங்கி  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவால் வழங்கப்பட்டது.  


 

முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. கலைப் பிரிவில் பிரபல பாடகி உஷா உதுப் மற்றும் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது.   பஜன் பாடகர் கலுராம் பமானியா, வங்கதேச பாடகி ரெஸ்வானா சவுத்ரி பன்யா மற்றும் கோபிநாத் ஸ்வைன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பரதநாட்டிய நடனக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சென்னை திரும்பிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்


இந்நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம விபூஷன் விருது கொடுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.  மத்திய அரசிடமிருந்து இதுவரை முறைப்படி எந்த அழைப்போ, அறிவிப்போ  அவருடைய குடும்பத்திற்கு கொடுக்கவில்லை என விஜயகாந்த் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், விருது குறித்து மத்திய அரசு சார்பாக இதுவரை யாரும் பிரேமலதா விஜயகாந்திடமோ மற்றும் அவர்களுடைய மகன்களிடமோ  இதுவரைக்கும் எதுவும் பேசவில்லை எனத் தெரிகிறது.  

From around the web