பஹல்காம் தாக்குதல்... நாளை அமைச்சரவைக் கூட்டம்!

இந்த கூட்டத்தின் முடிவில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியா வரத் தடை, தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடல், சிந்து நதிநீா் பகிா்வு ஒப்பந்தம் ரத்து உட்பட அனைத்து முடிவுகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் நாளை ஏப்ரல் 30ம் தேதி, புதன்கிழமை பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் 2வது கூட்டம் நடைபெற உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட்டோர் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர். பஹல்காம் தாக்குதல் குறித்து இந்த கூட்டத்தில் அடுத்தகட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!