பஹல்காம் தாக்குதலை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த கூடாது... கனிமொழி எம்பி பேட்டி!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை மத்திய அரசு அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவது நாட்டின் நலனை பாதிக்கும் என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தொழில் களம் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று சிறந்த இளம் தொழில் முனைவோரின் திட்டங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தவனையாக 3பேருக்கு தலா ரூ.2லட்சம் நிதியுதவியை கனிமொழி எம்பி வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், இத்திட்டத்தில் 400பேர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில் மேலும் 40 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார். மேலும் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மிகவும் துயரமானது. இது நாட்டு மக்கள் அனைவரது மனதிலும மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை மத்திய அரசு அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவது நாட்டின் நலனை பாதிக்கும் என்றார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!