இந்திய வீரர்கள் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறாது!

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஜனவரி 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் போட்டிகள் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இத்தொடரில் 8 அணிகள் விளையாடவுள்ளன.
இந்த போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து வங்காள தேசம் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் லீக் சுற்றில் களம் காண உள்ளன.
இத்தொடரில் விளையாடவிருக்கும் வீரர்கள் குறித்த அறிவிப்பை மற்ற அணிகள் ஏற்கனவே தெரிவித்திருக்கும் நிலையில், இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ சில நாட்களுக்கு முன்னதாக அறிவித்திருந்தது.
அதன்படி, இந்திய அணியில் ரோகித் சர்மா (கேப்டன்) , சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாடுவார்கள் எனவும், பும்ராவின் உடல்நிலை கருதி அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இடம் பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள் அணியும் ஜெர்சியில் நடப்பு போட்டியை நடத்தும் பாகிஸ்தான் பெயரை பொறிக்க பிசிசிஐ மறுப்பு தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், விளையாட்டில் இந்தியா அரசியல் செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!