அதிர்ச்சி... கார் விபத்தி சிக்கிய கிரிக்கெட் வீராங்கனைகள்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
கார் விபத்தில் சிக்கிய பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் பிஸ்மா மரூப் மற்றும் குலாம் பாத்திமா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் அவர்கள் பங்குபெறுவார்களா என்பது குறித்து இனி கலந்தாலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 18ம் தேதி துவங்குகிறது. இந்த தொடருக்காக பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் கராச்சியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
A setback for Pakistan as two key players sustain injuries following a minor car accident 👇https://t.co/MuPdocIEU7
— ICC (@ICC) April 6, 2024
இதற்கிடையில், இந்த அணியில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிஸ்மா மரூப் மற்றும் குலாம் பாத்திமா ஆகியோர் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், "எங்கள் அணியின் வீரர்கள் பிஸ்மா மரூப், குலாம் பாத்திமா ஆகியோர் நேற்று மாலை கார் விபத்தில் சிக்கியுள்ளனர்.
கார் விபத்து அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இருவரும் அணியின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்து மருத்துவ அணி, இருவரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடுவார்களா, தொடரில் பங்கேற்பார்களா என்பது தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!