கதறும் பாகிஸ்தானியர்கள்... 1 கிலோ அரிசி ரூ.340, 1 லிட்டர் பால் ரூ.224... தொடர்சரிவில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

கடந்த ஏப்ரல் 22ம் தேதி இந்தியாவின் காஷ்மீரில் உள்ள பஹல்காம் பள்ளத்தாக்கில், பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் இந்தியா தாக்குதல் நிகழ்த்தால் என்கிற அச்சத்தில் இருக்கிறது பாகிஸ்தான். இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர்ப்பதற்றம் உருவாகியிருக்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து ஊடகங்கள் அனைத்தும் அலசத் தொடங்கிவிட்டன.
பாகிஸ்தானில் 1 கிலோ சிக்கன் ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ அரிசி விலை ரூ.340 ஆகவும், ஒரு டஜன் முட்டை ரூ.330க்கும், ஒரு லிட்டர் பால் விலை ரூ.224க்கும் விற்பனையாகிறது என்கிறார்கள்.
பாகிஸ்தானில் தற்போது இயற்கை சீற்றங்களால் வேளாண்மையை பாதித்து கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. இந்த ஆண்டு கோடைக்குள் ஒரு கோடி பேர் உணவுப் பற்றாக்குறை, பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படும் நிலையில், பணவீக்கம் அபாய அளவில் உள்ளது.இதனால் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை மூடப்பட்டுவிட்ட நிலையில், அந்நாட்டில் அடிப்படைப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்க துவங்கியிருக்கிறது.
இந்தியாவிலிருந்து 40 சதவீதம் வரை மருந்துத் தயாரிப்புக்கான கச்சாப் பொருட்களை பாகிஸ்தான் இறக்குமதி செய்து வந்த நிலையில், தற்போது அந்நாட்டில் மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!