பாலமேடு ஜல்லிக்கட்டில் 7 வது சுற்றுக்கு 2 பேர் தகுதி... விறுவிறுப்பான ஆட்டம்!

 
ஜல்லிக்கட்டு
 

தமிழகம் முழுவதும் நேற்று ஜனவரி 14ம் தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தை முதல் நாளில்  மதுரை அவனியாபுரத்தில் நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது.இதனையடுத்து, இன்று ஜனவரி 15ம் தேதி மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா  காலை 7.40 மணிக்கு  கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இதில் 1000க்கும் பேற்பட்ட காளைகள் மற்றும் 900க்கும்  மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். முதலில் மகாலிங்க சாமி மடத்து கமிட்டி கோவில் காளை  அவிழ்த்து விடப்பட்டது.

ஜல்லிக்கட்டு

அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றனர்.
போட்டியில் சிறந்து விளங்கும் காளை மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்த நிலையில்  6வது சுற்றில் 2 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். 6 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் மாடுபிடி வீரர்கள் 15 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 8 பேர், பார்வையாளர்கள் சிறுமி உட்பட 7 பேர் என இதுவரை மொத்தமாக 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேல்சிகிச்சைக்காக 4 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு

6ம் சுற்று முடிவின் படி  மொத்த மாடுகளின் எண்ணிக்கை 109,  களம் கண்ட மாடுகள் : 92, பிடிபட்ட மாடுகள் : 11 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல்  இறுதி சுற்றுக்கு தகுதியான வீரர்கள்: 2 நபர்
சசிக்குமார் - பொதும்பு, (Bink 284 ) - 4 காளைகள்
அருண்குமார் - வாடிப்பட்டி( Bink 255 ) - 3 காளைகள்
தற்போது 7வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! .