பெற்றோர்களே உஷார்.... பானிபூரி சாப்பிட்ட 15 குழந்தைகள் கவலைக்கிடம்... !

 
பானிபூரி பானிபூரி

தெலுங்கானா மாநிலம் இராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள தங்கல்லப்பள்ளி மண்டலம் கேசிஆர் நகர் குடியிருப்புப் பகுதியில் நேற்று மாலை ஒட்டுமொத்த பொதுமக்களையும் கவலையில் ஆழ்த்தும் வகையிலான ஒரு அதிர்ச்சிகரமான  சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதிக்குள் மாலை நேரத்தில் வழக்கம் போல வந்த ஒரு தள்ளுவண்டி வியாபாரியிடம், அங்கு வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான சிறுவர்கள் மிகுந்த ஆசையோடு பானிபூரி வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். பானிபூரி சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அந்தச் சிறுவர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்து கடுமையான உடல்நலக் குறைவு ஏற்படத் தொடங்கியுள்ளது.

India Today | A suspected food poisoning incident was reported from Telangana's Rajanna Sircilla district, where 15 children were hospitalised after... | Instagram

அங்கு ஆசையோடு பானிபூரி சாப்பிட்ட மொத்தம் 15 சிறுவர்களுக்கு ஒரே நேரத்தில் திடீரென வயிற்றுப்போக்கு மற்றும் தொடர் வாந்தி போன்ற விஷ உணவு பாதிப்பிற்கான (ஃபுட் பாய்சனிங்) நச்சு அறிகுறிகள் மிகத் தீவிரமாகத் தென்பட்டன. இதனால் ஒட்டுமொத்தக் குடியிருப்பும் பெரும் பதற்றமடைந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 15 சிறுவர்களும் பெற்றோர்களால் உடனடியாக மீட்கப்பட்டு இராஜன்னா சிர்சில்லா மாவட்ட அரசு சிவில் மருத்துவமனைக்கு அவசர அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டு தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

Over 18 children and 2 adults hospitalized after eating pani puri at a roadside stall in Jharkhand; a 6-year-old child tragically died without treatment. Authorities have collected food samples for testing. 💔 #

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த தங்கல்லப்பள்ளி காவல்துறையினர், விபரீதத்திற்கு மிக முக்கியக் காரணமாக இருந்த அந்தப் பானிபூரி வியாபாரியை உடனடியாக முறைப்படி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று உணவு மற்றும் குடிநீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்பொழுது சிறுவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்த அதிகாரிகள், தெருவோர உணவுகளை வாங்குவதில் பொதுமக்கள் எப்போதும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.