பெற்றோர்களே உஷார்... மொட்டைமாடியில் செல்போன் பேச்சு... உயரழுத்த மின்சாரம் தாக்கி 17 வயது மாணவன் கவலைக்கிடம்!

 
செல்போன்

ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால், அந்த குடும்பத்தில் குறைந்தது ஆறு செல்போன் நம்பர்களாவது இருக்கிறது. அந்த அளவுக்கு மனிதர்களின் ஆறம் விரலாகவே செல்போன்கள் மாறி விட்டன. தூங்கும் போதும், தூங்கி கண் விழித்ததும் முதலில் செல்போனைத் தான் மனிதர்கள் தேடுகிறார்கள். இந்நிலையில், உயரழுத்த மின்சாரம் தாக்கியதில், 17 வயது மாணவன் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை எடுத்து வருகிறார். 

சென்னை ஆவடியை அடுத்துள்ள திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வரும் 17 வயது பள்ளி  மாணவர் சந்தோஷ்.  சமீபத்தில் நடைப்பெற்ற 12ம் வகுப்பு தேர்வை எழுதி முடித்துள்ள சந்தோஷ், கடந்த மார்ச் 29ம் தேதி, தன்னுடைய  வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு செல்போனில் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

 உயர் அழுத்த மின்சாரம்
அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டுக்கு அருகில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பியில் இருந்து சந்தோஷ் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் சந்தோஷ் அலறி கூச்சலிட்டார்.  சந்தோஷின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சந்தோஷ் 90% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருமுல்லைவாயல் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். உயர் அழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் திருமுல்லைவாயில் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மொபைல்

இச்சம்பவம் உயர் அழுத்த மின்கம்பிகளால் ஏற்படும் ஆபத்து குறித்த அச்சத்தை உருவாக்கி விட்டுள்ளது. உயர் அழுத்த  மின்கம்பிகளுக்குக் கீழ் நின்றுகொண்டு மொபைலில் பேசினால் மின்சாரம் பாய்ந்து விடும் ஆபத்து குறித்த கேள்வியும் பொது மக்களிடையே எழுகிறது. இது குறித்து விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில் அண்ணாமலை பல்கலைக்கழக மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியர் , "மொபைல் மின்காந்த கதிர்வீச்சுக்கும் உயர் அழுத்த மின்கம்பிகளில் செல்லும் மின்சாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உயர் அழுத்த மின்கம்பிகளுக்குக் கீழ் நின்று பயன்படுத்தினால், எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே நேரத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது, அதன் மின்கடத்தாத் தன்மை குறைந்து விடும். அப்போது உயர் அழுத்த மின்கம்பிக்குக் கீழ் நின்றால், அந்த நபரே மின்கடத்தியாக மாறி, அவரது உடலில் மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது”  என குறிப்பிடப்பட்டுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web