திமுக அரசு மீது பாரிவேந்தர் பகீர் குற்றச்சாட்டு !! எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை !!
பெரம்பலுார் மாவட்டம் எறையூரில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூக மக்களுக்கு நிலப்பட்டா வழங்கக் கோரி, கலெக்டர் கற்பகத்தை பெரம்பலுார் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐஜேகே நிறுவன கட்சித் தலைவருமான பாரிவேந்தர் நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தார்.பின்னர் நிருபர்களிடம் எம்பி பாரிவேந்தர் பேசியதாவது...பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி அங்கம் வகிக்கிறது. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பாஜக கூட்டணியில் எந்த தொகுதி மற்றும், எத்தனை தொகுதி கேட்பது, தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து கட் சியின் உயர்நிலைக் குழு ஆலோசித்து அறிவிக்கும்.
திமுக தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆனநிலையிலும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை பின்னர், இப்போது மகளிர் உரிமைத் தொகை வழங்க திமுக அரசு முன் வந்திருக்கிறது. எல்லா பெண்களுக்கும் வழங்குவதாக கூறிவிட்டு, இரண்டரை கோடி பெண்கள் இருக்கும்போது ஒரு கோடி பேருக்கு மட்டுமே கொடுக்கப்போவதாக திமுக இப்போது கூறுகிறது.
அரசு கஜானா பற்றி கவலைப்படாமல், மக்களை கவர்வதற்காக தேர்தல் வாக்குறுதிகளை திமுக அளிக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர், பெரும்பாலான வாக் குறுதிகளை திமுக அரசு நிறைவேற்வில்லைஇவ்வாறு பாரிவேந்தர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் ரகுபதி உடள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர். கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட வென்றவர் பாரவேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?