மீண்டும் பெகட்ரான் பாக்ஸ்கான் வந்துச்சு !!
இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் தொழில்துறையின் முக்கிய கேந்திரமாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளைச் சுற்றிலும் சிறிய பெரிய அளவில் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.இதில்,ஆப்பிள் நிறுவனத்துக்கு செல்போன் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து கொடுக்கும் பணியில் தைவானின் பாக்ஸ்கான்,
பெகட்ரான் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. பாக்ஸ்கான் ஸ்ரீபெரும்புதுார் பகுதியிலும், பெகட்ரான் மகேந்திரா வேர்ல்ட் சிட்டி பகுதியிலும் தங்கள் தொழிற்சாலைகளை அமைத் துள்ளன. இந்நிலையில், பெகட்ரான் தன் தொழிற் சாலை விரிவாக்கம் தொடர்பாக கடந்தவாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், மற்றொரு முன்னணி நிறுவனமான பாக்ஸ்கான், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், ஆப்பிள் போனுக்கான பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் பணியில் உள்ள நிலையில், தன் தொழிலை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசிடம் ஏற்கனவே பேசியுள்ள நிலையில், தொழில் விரிவாக்கம் தொடர்பாக கடந்த வாரத்தில் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் பாக்ஸ்கான் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்தமுறை ஆயிரத்து 400 கோடி ரூபாய் முதல் ஆயிரத்து 600 கோடி ரூபாய் வரை பாக்ஸ்கான் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக, இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிதாக பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?