அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்ட மக்களே உஷார்!!

 
இடி மின்னல் மழை

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம்,   புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது.இந்த மழை ஜூலை 24 வரை அதாவது அடுத்த 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. கர்நாடகா, கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் பிற்பகல் ஒரு மணி வரை நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 மாவட்டங்களில் கன மழை

சென்னையை பொறுத்தவரை  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.   நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.  அத்துடன்  தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் ,  வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில்   வீசக்கூடும்.  

மழை

மேலும்  தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திரா பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web