முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க இயலாது.. நாளை திட்டமிட்டப்படி நடக்கும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

 
தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது! ஆட்டத்தை ஆரம்பித்த திமுக! மத்திய அரசிடம் அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நீட் முதுநிலைத் தேர்வை ஒத்திவைக்க இயலாது என்று கூறிவிட்டது. அறிவிக்கப்பட்டப்படியே நாளை நீட் முதுநிலைத் தேர்வு இரண்டு வேளைகளாக நடைபெற உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மனுவை விசாரித்த நிலையில், தேர்வை ஒத்திவைக்க முடியாது, முதுநிலை தேர்வுக்காக இரண்டு லட்சம் மாணவர்களும் நான்கு லட்சம் பெற்றோரும் காத்திருக்கிறார்கள். ஐந்து மனுதாரர்களுக்காக, 2 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை நிறுத்திவைக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.

நாம் அனைவரும் மிகவும் மாறுபட்ட நாட்டில் வாழ்கிறோம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். முதுநிலை நீட் தேர்வுக்கு ஒரு சில நாள்களே உள்ள நிலையில், அதனை ஒத்திவைப்பது ஏற்புடையது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இப்போது நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க வேண்டுமா? இதுபோன்ற ஒரு தேர்வை எவ்வாறு ஒத்திவைக்க முடியும்? தற்போதெல்லாம் மக்கள் நேரடியாக நீதிமன்றத்துக்கு வந்து தேர்வை ஒத்திவைக்குமாறு கோருகிறார்கள் என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதில் பிரச்னை இருந்ததால், தேர்வர்கள் தேர்வு மையத்தை அடைவதில் சிக்கல் ஏற்படும் எனக் கோரி முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த நீட் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் நடத்துகிறது. 

இந்நிலையில், நிகழாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு கடந்த ஜூன் 23-ஆம் தேதி நாடு முழுவதும் 259 நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த சுமாா் 25,000 மருத்துவா்கள் உள்பட நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் அதற்கு விண்ணப்பித்திருந்தனா். தோ்வுக்கு முந்தைய நாள் இரவில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது என்று மத்திய அரசு திடீரென அறிவித்தது. ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தோ்வு நாளை ஆகஸ்ட் 11ம் தேதி காலை, மதியம் என இரண்டு வேளைகளாக நடைபெறவுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா