ரசிகர்கள் கொண்டாட்டம்!! A+ பிரிவுக்கு முன்னேறிய ஜடேஜா!!

 
ஜடேஜா

ஆண்டுதோறும் பிசிசிஐ  தன்னுடைய  காண்ட்ராக்ட் வீரர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வருடாந்திர ஒப்பந்தம் அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை தேதியிடப்பட்டுள்ளது.

இந்த காண்ட்ராக்ட் படி  கிரேடு ஏ+ கீழ் விளையாடும் வீரர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 7 கோடி ஆகும். கிரேடு ஏ கீழ் விளையாடும் வீரர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 5 கோடி ஆகும். கிரேடு பி கீழ் விளையாடும் வீரர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் மூன்று கோடி ஆகும். கடைசி கிரேடான கிரேடு சி கீழ் விளையாடும் வீரர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு கோடி ஆகும்.

BCCI

இந்நிலையில் இந்த வருட (அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை) வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி ஏ+ பிரிவில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, காயத்தால் ஓய்வில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா ஆகிய 4 பேர் இடம் பிடித்துள்ளனர்.

பிரிவு ஏ-வில் ஹர்த்திக் பாண்ட்யா, தமிழக வீரர் அஷ்வின், முகமது ஷமி, கார் விபத்தில் சிக்கி தற்போது கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல் ஆகிய 5 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

Players

பிரிவு பி-யில் செத்தேஷ்வர் புஜாரா, கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகிய 6 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

அதேபோல் பிரிவு சி-யில், உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷன் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத் உள்ளிட்ட 11 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web