இறுதிச்சடங்கில் இன்ப அதிர்ச்சி... ஆம்புலன்சில் சடலமாக ஏற்றப்பட்டவர், வீடு சென்றதும் கண் விழித்த கீழிறங்கி வந்த சம்பவம்!

 
ஆம்புலன்ஸ்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் இறந்து விட்டதாக உடனிருந்து கவனித்து வந்த உறவினர், மருத்துவமனையில் இருந்தபடி கிராமத்தில் உள்ள மற்ற உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த தொழிலாளியின் வீட்டு முன்பு சாமியானா பந்தல் போடப்பட்டதுடன் தொழிலாளியின் உடலை வைப்பதற்காக சவப்பெட்டியும் கொண்டு வரப்பட்டது. இறுதிசடங்குக்கு அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்துவிட்டனர். ஆம்புலன்சில் இருந்து தொழிலாளியை இறக்கிய போது கண் விழித்து கை, கால்களை அசைத்ததால் உறவினர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆம்புலன்ஸ்
விழுப்புரம் அருகே 40 வயது கூலித்தொழிலாளி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை நேற்று மோசமானது. இது குறித்து அவரின் குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

தொழிலாளியை வீட்டுக்கு அழைத்து செல்வதாக அவரது உறவினர்கள் கூறினர். அதன்படி தொழிலாளியை டிஸ்சார்ஜ் செய்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல முற்பட்ட போது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் மூலமாக அவரது உடலை அனுப்பி வைத்துள்ளனர்.   

இதன் காரணமாக தொழிலாளியின் வீட்டு முன்பு சாமியானா பந்தல் போடப்பட்டு அவரது உடலை வைப்பதற்காக சவப்பெட்டியும் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அத்துடன் அவரை புதைப்பதற்காக குழியும் தோண்டப்பட்டது. மேலும் இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாட்டிலும் அவரது உறவினர்கள் செய்தனர்.

ஆம்புலன்ஸ்

இறுதி சடங்கிற்கு தேவையான பொருட்கள், பூமாலைகள் உள்ளிட்டவற்றை வாங்கி தயாரானார்கள். அத்துடன் தொழிலாளியின் வீட்டின் முன்பு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அழுதபடி சோகத்தில் இருந்தனர். இதனிடையே ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்ட தொழிலாளியை உறவினர்கள் கீழே இறக்கிய போது அவர் கண் விழித்து கை, கால்களை அசைத்துள்ளார். அவருக்கு நாடித்துடிப்பும் இருந்தது. இதைப் பார்த்த உறவினர்கள், தொழிலாளி உயிரோடு இருப்பதை கண்டு ஒரு கணம் அதிர்ச்சியடைந்தாலும், பெரும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

இதையடுத்து சிகிச்சைக்காக தொழிலாளியை அதே ஆம்புலன்சில் அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web