இன்று நார்டிக் நாடுகளின் உச்சி மாநாடு - பிரதமர் மோடி பங்கேற்பு!

 
modi modi

இன்று நார்வேயில் நடைபெற உள்ள 3வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துக் கொள்கிறார். அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் நரேந்திர மோடி தற்போது ஸ்வீடன் நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவிற்குச் சென்றடைந்துள்ளார்.

நார்வே விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவரை அந்நாட்டின் பிரதமர் ஜோனாஸ் கஹ்ர் ஸ்டோரே நேரில் வந்து மலர்க்கொத்து கொடுத்து மிகவும் அன்போடு வரவேற்றார். கடந்த 43 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நார்வே நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை என்பதால், இந்தத் தூதரக விசிட் உலக அரங்கில் பெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தங்கியிருக்கும் விடுதியின் முன்பாகத் திரண்டிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினர், தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து தேசியக் கொடிகளை ஏந்தியபடி பிரதமர் மோடிக்கு உற்சாகமாக முழக்கமிட்டு மாபெரும் வரவேற்பு அளித்தனர். இந்த நார்வே பயணத்தின் போது பிரதமர் மோடி அந்நாட்டின் அரசர் ஐந்தாம் ஹரால்டு மற்றும் ராணி சோனியா ஆகியோரை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாகப் பேசினார். மேலும் இரு நாட்டுப் பிரதமர்களும் இணைந்து இந்தியா–நார்வே வணிகம் மற்றும் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றத் திட்டமிட்டுள்ளனர்.

மோடி

இதன் தொடர்ச்சியாக, ஓஸ்லோ நகரில் இன்று நடைபெறவுள்ள 3-வது இந்தியா–நார்டிக் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இந்த மாநாட்டில் நார்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய 5 நார்டிக் நாடுகளின் பிரதமர்களும் கலந்து கொண்டு வர்த்தகம், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித் துறை மேம்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்க உள்ளனர்.

இருதரப்புப் பொருளாதார உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வழிவகை செய்யும் பிரதமரின் இந்த முக்கியப் பயணம் குறித்த விபரங்கள் தற்பொழுது இணையதளப் பக்கங்களில் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்று வருகின்றன