பள்ளி மாணவனுக்கு காமப்பசி... பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !

 
பெருமாயி

சேலம் மாவட்டம், தேப்பழலி ஊராட்சி, குருகண்டி பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி பெருமாயி (55). பேச முடியாத ஊனமுற்றவர். கணவர் மாணிக்கம் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் வீட்டில் பெருமாயி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி காலை, பெருமாயி தலையில் கல்லை போட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் வீட்டில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெருமாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பெருமாயின் வீட்டிற்கு வந்து சென்றவர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், குருக்கண்டியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அந்த வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவலை போலீஸாரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கடந்த 12ம் தேதி சிறுவன் பெருமாயின் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துள்ளார். அதன் பிறகு பெருமாயியை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெருமாயி சிறுவனை அடித்தது மட்டுமின்றி, இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவிப்பதாக சைகை காட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் சிறுவன் கீழே தள்ளிவிட்டு தலையில் கல்லை போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளான். இதையடுத்து, சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

 

From around the web