பொன்முடி பதவி நீக்கம்... மக்கள்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி .. அதிமுக பெருமிதம்!

 
பொன்முடி இபிஎஸ்

 தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு தென்மாவட்ட அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் பொன்முடியின் பதவி விலகல், தமிழ்நாடு முழுவதும் அதிமுக மக்கள் சக்தியை திரட்டி நடத்திய மாபெரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, என அதிமுக தெரிவித்துள்ளது. 

பொன்முடி

இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களைப் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க சிறுமையான பார்வை கொண்ட பொன்முடிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் அதிமுக  மக்கள் சக்தியைத் திரட்டி நடத்திய மாபெரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் எனத் தெரிவித்துள்ளனர்.  இங்கு ஆளும் முதலமைச்சர் அத்தனை ஊழல்களுக்கும் துணை நின்று "தியாகி" பட்டம் சூட்டிய நிலையில், நீதிமன்றம் மூலம் செந்தில் பாலாஜி பதவி விலகல் என்ற நீதி கிடைத்திருக்கிறது!
 பொன்முடி
அரசியலை மக்கள் சேவையாக நினைக்காமல், ஊழல் செய்து கொள்ளை அடிக்கும் பிழைப்பாகவே கருதும் மு.க.ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர் விடத் தொடங்கிவிட்டன.  2026ல் அதிமுகவின் நல்லாட்சி அமைவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

From around the web