பிரபல சின்னத்திரை நடிகைக்கு இரட்டைக் குழந்தைகள்... வைரலாகும் குழந்தைகளின் புகைப்படம்!

 
ஸ்வேதா

பிரபல சின்னத்திரை நடிகை ஸ்வேதாவின் இரட்டைக் குழந்தைகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் பலரும் குழந்தைகளுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியின் ‘சந்திரலேகா’ தொடர் மூலமாக பிரபலமான நடிகை ஸ்வேதாவுக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் அவர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, ரசிகர்களுடன் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். 

சன் டிவியில் 8 வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்த ‘சந்திரலேகா’ சீரியலில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ ஜி.எஸ், சந்தியா ஜகர்லமுடி, பந்தேகர், தனுஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். ஏ.பி.ராஜேந்திரன் இந்த சீரியலை இயக்கி இருந்தார். 

ஸ்வேதா-மால் முருகன் தம்பதி

இந்த சீரியலில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா. ‘ஆழ்வார்’ படத்தில் அஜித்தின் தங்கை கதாபாத்திரம், ஜெயம் ரவியின் ‘பூலோகம்’ உள்ளிட்ட ஒருசில படங்களிலும் நடித்தார். பின்பு, ‘சந்திரலேகா’, ‘மகள்’, ‘செம்பருத்தி’ ஆகிய சீரியல்களில் நடித்தார் ஸ்வேதா.

இவர், கடந்த ஆண்டு நடிகராகவும் தொகுப்பாளராகவும் இருந்த மால் முருகனைத் திருமணம் செய்து கொண்டார். இந்த ஆகஸ்ட் மாதத்தில் இவர்களுக்கு ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. இந்த நிலையில், தங்களது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி இருந்தனர்.

ஸ்வேதா

மகனுக்கு கிரிதன் கிருஷ்ணா என்றும் மகளுக்கு சர்வஸ்ரீ என்றும் பெயர் வைத்திருந்தனர். மேலும், முதல் முறையாக தங்களது குழந்தைகளின் புகைப்படங்களையும் இந்த தம்பதி பகிர்ந்துள்ளது. ரசிகர்கள் குழந்தைகளுக்குத் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web