மழை வெள்ள பாதிப்பு... தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி பாதிப்பு!
கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் வெள்ளம் தேங்கி, பயிர்கள் நாசமாகி உள்ளன. இந்நிலையில் மழை வெள்ளம் காரணமாக அனல் மின் நிலையத்தின் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியத்திற்குச் சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அனல் மின் நிலையப் பகுதிக்கு கடல் நீர்வரத்து கால்வாய் சுவர் இடிந்து விழுந்தது.

இதனால் அந்தக் கால்வாயில் சாம்பல் கழிவுகள் உள்ளே புகுந்து கடல் நீர் உள்ளே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதல் 3 யூனிட்டுகளிலும் சுமார் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலைய ஊழியர்கள், சாம்பல் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
