பிரதோஷம், அமாவாசை... மே 5ம் தேதி முதல் சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி!
May 3, 2024, 12:55 IST
பிரதோஷம், அமாவாசை தினங்களை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் விற்றிருக்கும் சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு மே 5ம் தேதி முதல் மே 8 ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அமாவாசையை முன்னிட்டு மே 5ம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சதுரகிரி மலையேறும் பக்தர்கள் கோயிலில் இரவில் தங்க அனுமதி கிடையாது.

வெயில் காலம் என்பதால் வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதித்துள்ளது. பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
