ஆறே மாதத்தில் இடிந்து விழுந்த தொடக்கப் பள்ளி.. பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

 
பள்ளி விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அத்தி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சேதமடைந்துள்ளது. பின்னர் கனிம வள நிதியின் கீழ் 17 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு 6 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வந்தனர்.

இக்கட்டடத்தில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் படித்துக் கொண்டிருந்த போது, திடீரென பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த சிமென்ட் கார்கள் பெயர்ந்து பள்ளி மாணவர்கள் தலையில் விழுந்தன. இதில் கீழே அமர்ந்திருந்த 5 மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்களை ஆசிரியர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,""பள்ளி கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது.அவசர அவசரமாக திறக்கப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது.பள்ளி கட்டடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீதும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். " இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web