பிரதமர் மோடி 8 நாட்கள் , 5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்து டெல்லி திரும்பினார்!
பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) என 8 நாட்கள் தொடர் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, தனி விமானம் மூலம் இன்று ஜூலை 10ம் தேதி டெல்லி திரும்பியுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பயணத்தின்போது, இந்தியா உடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பிரேசிலின் தலைமையில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

பிரதமர் மோடி ஜூலை 2 ம் தேதி கானாவின் தலைநகரான அக்ராவிற்கு சென்றார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு ஆப்பிரிக்க நாட்டிற்கு ஒரு இந்தியப் பிரதமர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.ஜூலை 3 ம் தேதி, பிரதமர் மோடி டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு பயணம் செய்தார். இது பிரதமராக கரீபியன் நாட்டிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக அமைந்தது.
ஜூலை 4 ம் தேதி பியூனஸ் அயர்ஸுக்கு விஜயம் செய்த பிரதமர் மோடி, அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேயுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. சுற்றுப்பயணத்தின் 4வது கட்டமாக பிரதமர் மோடி பிரேசிலுக்கு சென்றார். அங்கு அவர் ஜூலை 6 முதல் 7 வரை ரியோ டி ஜெனிரோவில் நடந்த 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
தனது சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டத்தில், பிரதமர் மோடி நமீபியாவுக்குச் சென்றார. நமீபியாவில் அவர் அந்நாட்டு அதிபரை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் மற்றும் நமீபியா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அங்கு அவருக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி 8 நாட்கள் , 5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்து டெல்லி திரும்பினார்!
பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) என 8 நாட்கள் தொடர் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, தனி விமானம் மூலம் இன்று ஜூலை 10ம் தேதி டெல்லி திரும்பியுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பயணத்தின்போது, இந்தியா உடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பிரேசிலின் தலைமையில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

பிரதமர் மோடி ஜூலை 2 ம் தேதி கானாவின் தலைநகரான அக்ராவிற்கு சென்றார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு ஆப்பிரிக்க நாட்டிற்கு ஒரு இந்தியப் பிரதமர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.ஜூலை 3 ம் தேதி, பிரதமர் மோடி டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு பயணம் செய்தார். இது பிரதமராக கரீபியன் நாட்டிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக அமைந்தது.
ஜூலை 4 ம் தேதி பியூனஸ் அயர்ஸுக்கு விஜயம் செய்த பிரதமர் மோடி, அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேயுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. சுற்றுப்பயணத்தின் 4வது கட்டமாக பிரதமர் மோடி பிரேசிலுக்கு சென்றார். அங்கு அவர் ஜூலை 6 முதல் 7 வரை ரியோ டி ஜெனிரோவில் நடந்த 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
தனது சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டத்தில், பிரதமர் மோடி நமீபியாவுக்குச் சென்றார. நமீபியாவில் அவர் அந்நாட்டு அதிபரை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் மற்றும் நமீபியா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அங்கு அவருக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கப்பட்டது.
