பகீர்!! கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்!!

 
பால முருகன்

 மாதா பிதா குரு தெய்வம் என தாய் தந்தைக்கு அடுத்த இடம் ஆசிரியருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நம்மை உருவாக்குபவள் தாயாகவும், சான்றோன் ஆக்குவது தகப்பனாக இருந்தாலும் சொல்லாலும், செயலாலும் மனிதாக ஆக்குபவர்கள் ஆசிரியர்கள் தான். இதனால் தான் தெய்வத்திற்கு முன்னால் ஆசிரியர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஊதியத்திற்காக செய்யும் பணி கிடையாது. மாணவர்களை ஊதியம் பெற வைக்கும் பணி என ஆசிரியர்களுக்கு எத்தனையோ கோட்பாடுகள் சொல்லப்பட்டு வருகின்றன.ஆனால் சமீபகாலமாக இதை சீரழிக்கும்வகையில் சில ஆசிரியர்களின் செயல்கள் அமைந்து வருகின்றன.  

கம்ப்ளைண்ட்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராக  பாலமுருகன்  பணிபுரிந்து  வருகிறார். இவர், ஓராண்டுக்கு முன்பு  நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாறுதலாகி பல்லடம் அரசு கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியில் சேர்ந்தார்.இவர் மாணவி ஒருவருக்கு கல்லூரி வளாகத்திலேயே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  அதிர்ச்சி அடைந்த மாணவி ஆன்லைன் மூலம் கல்லூரி நிர்வாகத்தில்   புகார் அளித்தார். அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டது.  

பாலியல் வன்கொடுமை


அதில் பேராசிரியர் பாலமுருகன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது   இது குறித்து பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த புகாரின் பேரில்   போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த விஷயம் அறிந்த  தமிழ்த் துறை தலைவர் பாலமுருகன் தலைமறைவானார். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதனையடுத்து பாலமுருகனை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.இந்நிகழ்வு மாணவர்கள், பெற்றோர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web