பொதுமக்கள் ஆர்ப்பட்டம்... கோவில் இடத்தில் கட்டப்பட்ட கழிவறை கட்டிடம் இடித்து அகற்றம்!

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடத்தில் பிரளயகாலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் முன்பகுதியில் கோயிலுக்கு சொந்தமான திருக்குளம் அமைந்துள்ளது. 30 ஆண்டுகளாக இந்த குளத்தை புனிதமாக கருதி பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக குளத்தின் அருகில் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். குடியிருப்பு வீடுகளின் கழிவுநீர் அனைத்தும் இந்த குளத்தின் விடுவதுமாக இருந்து வந்தது.
இந்த குளத்தின் அருகில் கடந்த 15 வருடத்திற்கு முன், பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் இரண்டு மாடி கட்டண கழிப்பறை கட்டப்பட்டது. இந்த கட்டுமானத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் கடந்த 3 வருடத்திற்கு முன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தொடர்ந்து தீவிர விசாரணை செய்து கழிவறை கட்டிடத்தை பேரூராட்சி நிர்வாகம் தானாக முன்வந்து அகற்ற வேண்டும் என பிப்ரவரி 14, 2024ம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்த நிலையில், கடலூர் இந்து சமய அறநிலைய துறையின் இணை ஆணையர் ஜோதி உத்தரவின் பேரில், கடலூர் உதவி ஆணையர் சந்திரன், ஆலய நிலங்கள் வட்டாட்சியர் செந்தில்குமார், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் மாலா, பெண்ணாடம் பிரளய காலேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் மகாதேவி, திட்டக்குடி சரக ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டிடம் இடித்து முழுவதும் அகற்றப்பட்டது.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் கழிவறை வேண்டும், அதனால் இடிக்க கூடாது என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த பின் கட்டிடம் முழுவதையும் இடித்து அகற்றியுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!