காய்ச்சலுடன் சென்ற குழந்தைக்கு வெறிநாய்க்கடி சிகிச்சை !! தாய் பரபரப்பு புகார்!!

 
ஷைனி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தேரேக்கால் பகுதியைச் சேர்ந்தவர் தனிஷ். இவரது மனைவி ஷைனி. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஜூலை 25ம் தேதி அந்த குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல்சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து, நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஜெயசேகரன் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.

ஷைனி

எந்தவித முறையான பரிசோதனை செய்யாமல், வெறிநாய்க்கடிக்கு சிகிச்சை அளிப்பதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆம்புலன்ஸ்

அங்கு குழந்தைக்கு வெறிநாய்க்கடி என கண்டறியப்பட்டு ரேபிஸ் நோய்க்கான சிகிச்சை அளித்ததாக தாய் ஷைனி தெரிவித்தார். ஒரு கட்டத்தில், குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தாய் ஷைனி குற்றம் சாட்டினார்.இதையடுத்து, கேரளாவில் உள்ள NIMS மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டவுடன், குழந்தைக்கு எலி காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web