ராகுல் காந்தி மீண்டும் எம்பி ஆனார்!! தொண்டர்கள் கொண்டாட்டம்!!

 
ராகுல் மோடி

மோடி சமூகத்தினரை விமர்சித்த வழக்கில் காங்கிரஸ் எம்பி  ராகுல் காந்திக்கு   2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இது குறித்த மேல் முறையீட்டு வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டணையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது. இதனையடுத்து அவரது எம்.பி. பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.இது  குறித்து மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

raghul gandhi ராகுல் காந்தி

மேலும் மக்களவை செயலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெற்றுள்ளது. இதன்மூலம் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆகியுள்ளார். இதனையடுத்து  நாளை தொடங்க உள்ள மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்க இருக்கிறார்.

ஸ்டாலின் ராகுல்


 ராகுல் காந்திக்கு எம்பி பதவி திரும்ப வழங்கப்பட்ட   நிலையில் நாடாளுமன்றத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதேபோன்று மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தியை அனல் பறக்கும் உரையாற்ற வைக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web