ரயில்வே, வங்கி தேர்வு எழுதறவங்களுக்கு உணவு, தங்குமிடத்துடன் 6 மாத பயிற்சி இலவசம்!

 
 ரயில்வே, வங்கி தேர்வு எழுதறவங்களுக்கு உணவு, தங்குமிடத்துடன் 6 மாத பயிற்சி இலவசம்! 
தமிழக அரசு சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு உறைவிட வசதியுடன் ஆறு மாத கால பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான நுழைவு தேர்வு மே 31, 2025 அன்று  நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வழங்கிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்து வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது. சொந்த தொழில் செய்ய திட்டமிடுபவர்களுக்காக பயிற்சியும் கடன் உதவி திட்டங்களையும் வழிகாட்டுகிறது.

 ரயில்வே, வங்கி தேர்வு எழுதறவங்களுக்கு உணவு, தங்குமிடத்துடன் 6 மாத பயிற்சி இலவசம்! 
அடுத்ததாக அரசு பணியில் இணைய திட்டமிட்டு இரவு பகலாக படித்து வரும் இளைஞர்களுக்கு அரசே இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், நான் முதல்வன் - போட்டித் தேர்வுப் பிரிவு 'நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் BANKING பணிகளுக்கான கட்டணமில்லா ஆறு மாத கால உறைவிடப் பயிற்சித் திட்டத்தை அறிவித்துள்ளது. 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது துணை முதல்வர்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் மார்ச் 7ம் தேதி தொடங்கப்பட்டது.  அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் 2024-2025 -ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் உரையில், ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், இரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு,  ஒவ்வொரு ஆண்டும்  தேர்ந்தெடுக்கப்பட்ட 1000  மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என அறிக்கப்பட்டது. இதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் செயல்பட்டு வரும்  நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக "நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை" துவங்கவுள்ளது. இப்பயிற்சிக்கான 1000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக 31.05.2025 அன்று இருவேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது. 

 ரயில்வே, வங்கி தேர்வு எழுதறவங்களுக்கு உணவு, தங்குமிடத்துடன் 6 மாத பயிற்சி இலவசம்! 
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி அல்லது SSC cum RAILWAYS தேர்வுக்களுக்கான பயிற்சி,  இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும். இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள். https://www.naanmudhalvan.tn.gov.in στο விரிவான அறிவிக்கையைப் படித்துப் பார்த்து, 29.04.2025 அன்று முதல் விண்ணப்பிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13.05.2025 ஆகும்.
 
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி : 28.04.2025
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி : 29.04.2025
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 13.05.2025 11.59 P.M
நுழைவுச் சீட்டு வெளியீடு : மே 3ம் வாரம்
தேர்வு நாள் 31.05.2025 (10.00 AM-11.00 AM)

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web