பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை... சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

 
h.raja
 


பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு, திமுக எம்.பி. கனிமொழி குறித்து விமர்சனம் செய்ததற்காகவும், பெரியார் சிலை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்ததாகவும் தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் தலா  6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னையில் உள்ள எம்.பி. - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பாஜக தொண்டர்களை  அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

ஹெச் ராஜா

கடந்த 2018ல், ‘பெரியார் சிலையை உடைப்பேன்’ என்று ஹெச்.ராஜா  தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்ததற்காகவும், திமுக எம்.பி. கனிமொழியை விமர்சித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்துக்களைப் பதிவிட்டிருந்ததாகவும்,  ஈரோடு நகர காவல்துறை, மற்றும் கருங்கல்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஹெச்.ராஜா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 

இந்த வழக்குகளை, சென்னையில் உள்ள எம்.பி. - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் விசாரித்து வந்தார். 

இந்துக் கோவில்களை போல் மற்ற மத வழிபாடுகளும் தமிழில் நடத்தப்படுமா? ஹெச். ராஜா காட்டம்!

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயவேல், இரண்டு பதிவுகளும் ஹெச். ராஜாவின் சமூக வலைதள  பக்கத்தில் இருந்து அனுப்பபட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானித்து, ஹெச். ராஜா குற்றவாளி என தீர்மானிக்கிறது. எனவே இந்த இரண்டு வழக்குகளிலும் ஹெச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.  ஹெச்.ராஜா தரப்பில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!