வெறித்தனம்.... மண் சோறு சாப்பிட்டு அங்கப்பிரதட்சணம் செய்த ரஜினி ரசிகர்கள்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப் இயக்கத்தில், அனிருத் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரப் உட்பட பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி ஹிட் அடித்து, ரீல்ஸ், ஷார்ட் என ட்ரெண்டாகி வருகிறது.
படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 86 லட்சத்துக்கும் அதிகமான முன்பதிவை பெற்றுள்ளதாகவும், இதனால் டிக்கட் முன்பதிவிலும் சாதனை படைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி மதுரையில் ரஜினி ரசிகர் ஒருவர் வெறித்தனமான வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றியுள்ளார்.
அவர் ஜெயிலர் படம் வெற்றி பெற திருப்பரங்குன்றத்தில் உள்ள வெயில் உகந்த அம்மன் கோவிலில் ரஜினி ரசிகர் கோல்டன் சரவணன் அங்கப்பிரதட்சணம் செய்து, தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார். அதனை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி மண் சோறு உண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகம்முழுவதும் இதே போல் வெறித்தனமான ரசிகர்கள் பலர் உள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?