ரஜினிக்கு கோவில் கட்டி தினசரி அபிஷேகம், பூஜை , வழிபாடு!! வெறித்தனமான ரசிகர்!!

 
rajini kovil

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஆகஸ்ட் 10ம் தேதி இவரின் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ரஜினிக்காக கோவில் அமைத்து தினசரி 2  வேளைகள் பூஜை செய்து வழிபட்டு வருகிறார் ரஜினி ரசிகர் ஒருவர். இவர் இதுவரை பலமுறை  ரஜினியை நேரில் சந்திக்க கடிதம் எழுதி இன்றுவரை அழைப்பு கிடைக்கவில்லை. விரைவில் தலைவர் என்னை அழைப்பார் என நெகிழ்ச்சியுடன் கூறிவருகிறார்.  

rajini kovil

ரஜினி தான் எங்கள் தெய்வம் எனபல ரசிகர்கள் ஆவேசத்துடன் கூறுவதை   கேட்டிருப்போம். உண்மையிலேயே ரஜினியை குலதெய்வமாக கருதி அவருக்காக கோவில் அமைத்து தினமும்  பூஜை செய்து வருகிறார் ரஜினியின் வெறித்தனமான ரசிகர் ஒருவர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனியார் திருமண தகவல் மையம் நடத்தி வரும் கார்த்திக் நடிகர் ரஜினிகாந்தின்  தீவிர பக்தர்  இவர் ரஜினிகாந்த் மீது கொண்ட பக்தியின் காரணமாக திருமங்கலத்தில் உள்ள தனது அலுவலகத்தில் ஒரு அறையை கோவிலாக மாற்றியுள்ளார்.  அந்த அறைக்குள் அபூர்வ ராகங்கள் முதல் ஜெயிலர் வரை நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களின் புகைப்படங்கள் அனைத்தும் ஒரே சுவரில் ஒட்டவைக்கப்பட்டுள்ளன.   திரும்பும் திசையெல்லாம் ரஜினிகாந்த் முகம் தெரியும் அளவிற்கு கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் தினமும் 2 வேளை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் உண்டு  முக்கிய நாட்களில் நடிகர் ரஜினிகாந்த் உருவப்படத்திற்கு பால், சந்தனம், தயிர்,விபூதி,பன்னீர், இளநீர் என  வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தி சூடம் ஏற்றி சிறப்பு ஆராதனை செய்து வருகிறார்.

rajini kovil
மேலும் முக்கிய நாட்களில் நடிகர் ரஜினிகாந்த்  இந்த வழிபாட்டில் அலுவலக ஊழியர்களும் கலந்து கொள்கின்றனர். இது குறித்து  கார்த்திக் ” சின்னஞ் சிறுவயதிலிருந்தே  ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்கும்  அவர் நடித்த மாவீரன் படத்திலிருந்து இன்று வரை எல்லா திரைப்படங்களையும் பார்த்து விட்டேன்.  அவருடைய கடின உழைப்பால் தமிழகத்திலேயே சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்தது  4  தலைமுறைகளை கடந்து இன்னும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் ரஜினிகாந்த் மீது கொண்ட அன்பின் காரணமாகவே அவருக்கென்று தனி கோவில் அமைத்துள்ளேன். அதற்கு பூஜைகளும் செய்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார். ரஜினியை நேரில் சந்திக்க பலமுறை கடிதம் அனுப்பியும் இதுவரை அந்த வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை . இதன் மூலம்   ரஜினிகாந்த் தன்னை நேரில் சந்திக்க அழைப்பு கொடுப்பார் என கூறியுள்ளார்.  ரஜினிகாந்தை குலதெய்வமாக நினைத்து தினம் தினம் பூஜை செய்து வரு ரசிகரின் செயல் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web