‘வேட்டையன்’ படத்துக்காக ஹைதராபாத் புறப்பட்டார் ரஜினி... விமான நிலையத்தில் பேட்டி!
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான வேட்டையன் பட படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த். செய்தியாளர்களிடம் தன்னுடைய ஹைதராபாத் பயணம் குறித்து பேசிய ரஜினி, இதுவரையில் வேட்டையன் படத்தின் 75 சதவிகித படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
மும்பையின் பிரபல தயாரிப்பாளர் சந்தித்தது குறித்தும், செளந்தர்யாவின் அடுத்தப் படத்தில் நடிகர் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது குறித்தும் அடுத்த படம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இதுவரையில் அதிகாரப்பூர்வமாக எந்த படமும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என தெரிவித்து விட்டு, வழக்கம் போல் விரைந்து சென்று விட்டார்