ராஜீவ் காந்தி நினைவு தினம்: தந்தையின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மலரஞ்சலி செலுத்தினார்
May 21, 2021, 13:54 IST
முன்னாள் பிரதமர் பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் 30 ஆவது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் “உண்மை, இரக்கம், முன்னேற்றம்.” என்றும் பதிவிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் அவரது உருவப்படங்கள் மற்றும் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
From around the
web