நாளை மறுநாள் முதல் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை !
வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 35-க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
-
விலை உயர்வுக்கான காரணம்: ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு மற்றும் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற முக்கிய உற்பத்தி மாநிலங்களில் வெங்காய வரத்து குறைந்ததே விலையேற்றத்திற்குக் காரணம் என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
-
விற்பனை தொடங்கும் நாள்: முதற்கட்டமாக, வருகிற செப்டம்பர் 3-ம் தேதி முதல் இந்த சிறப்பு விற்பனைத் திட்டம் தொடங்குகிறது.
-
பயனாளிகள் விவரம்: நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 8,739 நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலமாக, சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வீதம் இந்த வெங்காயம் வழங்கப்படவுள்ளது.
அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்வுக்குத் தடைபடுவதோடு, நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
