திமுக அமைச்சருக்கு பகிரங்க மிரட்டல்... செருப்பு வீசி துடைப்பத்தால வரவேற்பு தந்தா நாங்க பொறுப்பில்ல!

 
 தா.மோ.அன்பரசன்

அம்மாவின் பக்தர்கள் யாரேனும் செருப்பு வீசினாலும், விளக்குமாறுடன் சிறப்பான வரவேற்பு அளித்தாலும் நாங்கள் பொறுப்பல்ல என திமுக அமைச்சர் அன்பரசனுக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரம் அருகே திமுக இளைஞரணி சேர்ப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ''கட்சி ஆரம்பித்து, கூட்டத்தைப் பார்த்தாலே முதல்வர் ஆகிற நடிகர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் காலத்தில் போய்விட்டது.


நடிகர்கள் பார்வையாளர்களை வாக்குகளாக மாற்ற நினைத்தால் அது நடக்காது. அப்படி இருந்தும் அவர்களால் அரசியலில் சாதிக்க முடியாது. ஏனென்றால் நடிகர்களுக்கு அறிவு இல்லை. அவர்களால் ஆட்சியை நடத்த முடியாது" என்று தா.மோ.அன்பரசன் கூறினார். மேலும் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆருடன் தொடர்புபடுத்தி தா.மோ.அன்பரசன் தவறாக ஒரு வார்த்தையை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அனைவராலும் தாயாக கருதப்படும் மாண்புமிகு அம்மாவை மிகவும் இழிவாக பேசியதன் மூலம் அமைச்சர் பதவி வகிக்கும் பெருமையை திரு தா.மோ.அன்பரசன் இழந்து விட்டார். உலகத் தமிழர்கள், மக்களுக்காக வாழ்ந்து மடிந்தவர்கள், அவரைப் பத்து வருடங்கள் ஆட்சியில் அமர வைத்தவர்கள்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியான அனைத்து வழிகளிலும் உங்களுக்கு எதிராக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழரின் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள், பொதுவெளியில் செல்லும் போது சற்று கவனம், உங்கள் பேச்சைக் கேட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் கோபப்படுவார்கள். அம்மாவின் பக்தர்கள் யாரேனும் காலணிகளை வீசினாலும், அம்மாவை நேசிக்கும் தாய்மார்கள் துடைப்பம் காட்டி சிறப்பான வரவேற்பு அளித்தால் நாங்கள் பொறுப்பல்ல,'' என்றார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா