பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை லேபிள்... FSSAI புதிய கட்டாய முன்மொழிவு!

 
pocket

பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் 'அதிக அளவு சர்க்கரை', 'உப்பு', 'செறிவூட்டப்பட்ட கொழுப்பு' என்ற சிவப்பு நிற எச்சரிக்கை லேபிளை கட்டாயமாக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முன்மொழிந்துள்ளது. குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்ததை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் பாக்கெட் உணவுகளை வாங்குவதற்கு முன்பே அதன் ஊட்டச்சத்து ஆபத்துகளை எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

குழந்தைகளிடையே நாளுக்கு நாள் அதிகரிக்கும் உடல் பருமன் மற்றும் இதர உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்கும் நோக்கத்தோடு இந்த முக்கிய முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. பாக்கெட் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் ஆபத்தான அளவுகள் குறித்து நுகர்வோர் உடனடியாகத் தெரிந்துகொள்ள இந்த சிவப்பு நிற எச்சரிக்கை லேபிள்கள் பெரிதும் உதவியாக இருக்கும். சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுப் பொருட்களின் தரத்தை முறைப்படுத்தவும் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றமானது உணவுத் துறை நிறுவனங்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

The Food Safety and Standards Authority of India (FSSAI) has proposed a mandatory red hexagonal front-of-pack warning label for packaged foods with excessive sugar, salt, or saturated fat to alert consumers to

இந்த புதிய விதிமுறைகள் முழுமையாக நடைமுறைக்கு வரும் பட்சத்தில் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பொருட்களின் தரத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். பொதுமக்கள் தங்களது குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்குத் தீங்கில்லாத பொருட்களைத் தாங்களே சுயமாகத் தேர்ந்தெடுத்து வாங்குவதற்கும் இது ஒரு விழிப்புணர்வாக அமையும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் இந்த மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து சிறப்பான வரவேற்புகள் கிடைத்து வருகின்றன.