இங்கிலாந்தில் பயங்கரம்: சீக்கியப் பெண்ணை வன்கொடுமை செய்த மதவெறியருக்கு 'வாழ்நாள் சிறை'!

 
கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண் கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீக்கியப் பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி நடைபெற்ற இந்த கொடூரச் சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இக்குற்றத்தில் ஈடுபட்ட 32 வயதான ஜான் ஆஷ்பி என்பவரை லண்டன் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பலாத்காரம் பாலியல் சிறுமி

விசாரணையில் ஜான் ஆஷ்பி குறித்துத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் தீவிரமான இஸ்லாமிய மத வெறுப்பு  கொண்டவர் என்பதும், அந்தப் பெண்ணைத் தாக்கும்போது மதம் சார்ந்த வெறுப்பு கோஷங்களை எழுப்பியதுடன், அப்பெண்ணின் மத அடையாளங்களைக் கிண்டல் செய்தும் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. "இது வெறும் பாலியல் குற்றம் மட்டுமல்ல, திட்டமிட்ட வெறுப்புக் குற்றம் (Hate Crime)" என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

பாலியல் வன்கொடுமை

வழக்கை விசாரித்த நீதிபதி, ஜான் ஆஷ்பியின் செயல் மனிதநேயமற்றது என்றும், சமூகத்தில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்ட அவருக்கு எவ்விதச் சலுகையும் வழங்க முடியாது என்றும் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஆயுட்காலம் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் (Life Sentence) வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பை இங்கிலாந்தில் உள்ள சீக்கிய அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் இது போன்ற கடும் தண்டனைகளே, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியையும், குற்றத்தில் ஈடுபட நினைப்பவர்களுக்கு அச்சத்தையும் தரும் எனப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.