தலைவர் பதவியிலிருந்து விலகி விடு தீனா... இளையராஜா பரபரப்பு ஆடியோ!

 
இளையராஜா பாடலுக்கு புதிய ஆப் அறிமுகம்!!

இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி விடு தீனா என்று இசையமைப்பாளர் இளையராஜா, ஆடியோ ஒன்றை  வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். 

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக தற்போது இசையமைப்பாளர் தீனா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், ஏற்கெனவே இரண்டு முறை தலைவராக தீனா பதவி வகித்து வந்ததாகவும், தற்போது மூன்றாவது முறையாகவும் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ள நிலையில், இதெல்லாம் வேண்டாம்... அடுத்த தலைமுறைக்கு வழி விட வேண்டும் என்று இளையராஜா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில், “இந்த இசையமைப்பாளர்கள் சங்கத்தை ஆரம்பித்தது எம்பி ஸ்ரீனிவாசன். திரைத்துறையில் முதன் முதலாக ஆரம்பித்த சங்கம் இது. இந்த சங்கத்தில் இரண்டு முறை தலைவராக இருக்கலாம் என்ற விதி உள்ளது. நீ ஏற்கெனவே இரண்டு முறை தலைவராக இருந்து விட்டாய்.

இளையராஜா

மூன்றாவது முறையாகவும் ஏன் போட்டியிடுகிறாய்? அடுத்தத் தலைமுறைக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டாமா? இந்த சங்கத்தில் தற்போது முறைகேடுகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். அதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கையை ஒரு தலைவராக நீ ஏற்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால், இதைச் சொல்கிறேன். நீ தலைவராக இருந்து பல நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறாய். அந்த மனநிறைவோடு தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

இளையராஜா- தீனா

இளையராஜாவின் ஆடியோ குறித்து பேசிய இசையமைப்பாளர் தீனா, “1960ம் ஆண்டு எம்பி ஸ்ரீனிவாசன் போட்ட உத்தரவு இது என்று அண்ணா சொல்கிறார். சங்க விதிமுறைகள் கால மாற்றத்திற்கேற்றபடி மாறும். அதன்படி, ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். இளையராஜாவிடம் யாரோ தவறாக சொல்லி இருக்கிறார்கள். அவரை நேரில் பார்த்து இது குறித்து புரிய வைக்கப் போகிறேன். தேர்தல் நிச்சயம் நடக்கும்” என்று கூறியுள்ளார்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web