நெகிழ்ச்சி வீடியோ... என் குழந்தைகளை பார்க்க விடுங்க... அட்டாரி- வாகா எல்லையில் கதறும் இந்தியதாய் !

 
 இந்திய பெண்
இந்தியாவில் நடத்தப்பட்ட திடீர் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு  வெளியேற இந்தியா உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில்  அட்டாரி வாகா எல்லையில் இந்திய பெண் ஒருவர் பாகிஸ்தானில் உள்ள தனது குடும்பத்துடன் சேர வேண்டும் என கண்ணீருடன் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த  வீடியோ ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

அந்த வீடியோவில் “நான் ஒரு இந்திய குடியுரிமை உடையவள். 10 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் நாட்டில் திருமணம் ஆனேன்,” என தனது குரல் நடுங்கக் கூறினார். “என் 2 குழந்தைகளும் இந்தியாவில் பிறந்துள்ளனர்.  ஆனால் அவர்கள் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள்,” என்றார்.


 
மேலும் தற்போதைய எல்லை விதிமுறைகளின்படி பச்சை பாஸ்போர்ட் (பாகிஸ்தான் பாஸ்போர்ட்) வைத்திருப்பவர்களை மட்டுமே எல்லை தாண்ட அனுமதித்து வருகின்றனர். இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் எனக்கு தன் குழந்தைகளுடன் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
“என் நிலையை கருணையுடன் புரிந்து கொண்டு, எல்லையை கடக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்,” என  கண்ணீர் விட்டு கதறுகிறார்.  இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களை பரவி இரு நாட்டின் விதிமுறைகளால் தன் குழந்தைகளை தாண்டி செல்ல முடியாமல் நிற்கும் ஒரு தாயின் துயரமான சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலரும்  தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web