பெரும்சோகம் ... காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப பலி!

 
காவிரி

 

கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே புகழ்பெற்ற முத்தத்தி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆஞ்சநேயசாமி கோயிலுக்கு நேற்று மாலை நேரத்தில்  குடும்பத்தினர் சிலர் சாமி தரிசனம் செய்வதற்காகத் தங்களது சொந்த வாகனத்தில் வருகை தந்துள்ளனர். கோயிலில் வழிபாடுகளை முடித்த பின்னர் அங்கே விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் காவிரி ஆற்றின் அழகைக் காண்பதற்காக அந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஆற்றங்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

ஆற்றங்கரையின் ஆபத்தான பாறைப்பகுதியில் நின்றுகொண்டு தங்களது மொபைல் போன் மூலம் நினைவாக ஒரு சுயப்படம் எடுக்க அவர்கள் முயன்றுள்ளனர். அப்போது   நிலைதடுமாறிய ஒருவர் ஆற்று வெள்ளத்தில் விழவே, அவரைக் காப்பாற்ற முயன்ற அடுத்தடுத்த நபர்களும் ஆழமான காவிரி ஆற்றில் தவறி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.  அவர்கள் யாருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தினால், கண் இமைக்கும் நேரத்திற்குள் 5 பேரும் அசாத்திய ஆழத்தில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆற்றில் மனிதர்கள் மூழ்குவதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், ஹலகூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆற்றில் தீவிரமாகத் தேடி உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஆற்றில் மூழ்கிப் பலியான விபரம், அந்தப் பகுதி ஏழை எளிய பொதுமக்கள் மத்தியில்  கடுமையான சோகத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.