லாரியில் இருந்து ரூ.50 லட்சம் கொள்ளை.. திருச்சியில் பயங்கரம்!
திருச்சி அருகே லாரியில் இருந்த ரூ.50½ லட்சத்தை பணத்தைக் கொள்ளையடித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக பாலத்தில் இருந்து குதித்து ஓட முயன்ற போது 3 பேரின் கால்கள் முறிந்தன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தும்பிச்சம்பட்டியை சேர்ந்தவர் ரமணி (50). தொழிலதிபரான இவருக்கு சொந்தமான ஒரு லாரியை நீலகிரி மாவட்டம், தொட்டகும்பை சேரனூர் பகுதியை சேர்ந்த டிரைவரான ஆனந்த்(40) ஓட்டி வந்தார். இவர் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட் பின்புறம் குறிஞ்சி நகர் பகுதியில் குடியிருந்து வருகிறார்.
இவர் தினமும் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்சி வழியாக தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு காய்கறிகள் ஏற்றிச்சென்று, பின்னர் அங்கிருந்து வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையத்திற்கு திரும்புவது வழக்கம். அதன்படி கடந்த 3-ந்தேதி மாலை கும்பகோணத்தில் காய்கறிகளை இறக்கிவிட்டு, மீண்டும் அங்கிருந்து வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். லாரியில் கிளீனராக லோகேஸ்வரனும்(22) பயணம் செய்தார்.
திருச்சி வழியாக பெட்டவாய்த்தலை அருகே உள்ள காவல்காரபாளையம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, ஒரு கடையில் டீ குடிப்பதற்காக இருவரும் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். அப்போது, மர்மநபர்கள் லாரியில் இருந்த ரூ.50 லட்சத்து 68 ஆயிரத்து 200-ஐ கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில், ஜீயபுரம் டிஎஸ்பி பாலசந்தர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் சந்தேகப்படும்படி சிலர் காரில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படையினர் நவலூருக்கு உட்பட்ட அரியாற்று பாலம் அருகே நிறுத்தப்பட்டு இருந்த காரின் அருகே சென்ற போது, காருக்குள் இருந்து 5 பேர் இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக அங்குள்ள அரியாற்றுபாலத்தில் இருந்து குதித்து ஓட முயன்றனர். உடனே 5 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் 5 பேரிடமும் விசாரணை நடத்தியதில் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பிரவீன்குமார் (25), போஸ் என்கிற இசக்கிமுத்து (25), நெல்லை நாங்குநேரியை சேர்ந்த வெள்ளைபாண்டி (22), நெல்லை மேலகாடுவெட்டியை சேர்ந்த முத்துமணிகண்டன் (25), மதுரை திடீர்நகரை சேர்ந்த சூர்யா என்கிற உதயநிதி (27) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் லாரியில் இருந்து கொள்ளையடித்த பணத்தில் ரூ.26 லட்சத்தை மீட்டனர். இந்த சம்பவத்தில் பயன்படுத்திய காரையும் கைப்பற்றி 5 பேரையும் கைது செய்தனர். இதற்கிடையே அரியாற்று பாலத்தில் இருந்து தப்பிக்க முயன்ற கீழே குதித்ததில் வெள்ளைபாண்டி, சூர்யா, இசக்கி முத்து ஆகிய 3 பேருக்கும் காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
