ரசாயனம் தடவிய மாம்பழங்கள் விற்றால் 5000 ரூபாய் அபராதம்... தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை!

 
மாம்பழம் மாம்பழம்

தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கி உள்ள நிலையில், லாப நோக்கத்திற்காகச் சில வியாபாரிகள் ரசாயனக் கற்களைப் பயன்படுத்தி மாம்பழங்களைப் பழுக்க வைப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தடுக்கும் வகையில், ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள பழச் சந்தைகள் மற்றும் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

மாம்பழம்

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதால் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் நீண்ட கால அடிப்படையில் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் பழங்களை வாங்கும்போது அதன் நிறம் மற்றும் வாசனையை வைத்து அவை இயற்கையாகப் பழுத்தவையா என்பதைக் கண்டறிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சோதனையின் போது விதிமீறலில் ஈடுபடும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, பறிமுதல் செய்யப்படும் பழங்கள் உடனடியாக அழிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாம்பழம்

பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த இடங்களில் ரசாயன மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டால், 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் உணவுப் பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம். கல் வைத்துப் பழுக்க வைப்பதைத் தவிர்த்து, இயற்கையான முறையில் வைக்கோல் அல்லது புகையூட்டிப் பழங்களைப் பழுக்க வைக்க வியாபாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வரும் வாரங்களில் சந்தைகளில் சோதனையை இன்னும் தீவிரப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதால், விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை பாயும் என அரசு எச்சரித்துள்ளது.